சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 14,வது வார்டு பகுதியில் சலவை தொழில் செய்ய வைகை ஆற்றின் கரையோரம் சலவை தொழில் கூடம் இருந்தது வந்தநிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஆற்று பெருவெள்ளத்தில் கூடம் அடித்து செல்லப்பட்டது ,
இதனால் அந்த இடத்தில் புதியதாக சலவை தொழில் கூடமும், ஆற்று படுகையில் நிரந்தர படிக்கட்டுகள் மற்றும் பாதை அமைத்து தர வேண்டும் என சலவைத் தொழிலாளிகள், பேரூராட்சி மன்றத்திலும், எம்எல்ஏ வெங்கடேசனிடம் கோரிக்கை விடுத்தனர்,
இதனை தொடர்ந்து நேற்று பேரூராட்சி 14,15,வார்டு பகுதிகளில் உள்ள இடங்களை வெங்கடேஷன் எம்.எல். எ ஆய்வு மேற்கொண்டு பின்னர் சலவை தொழில் செய்ய தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய சலவை தொழில் கூடமும், ஆற்றுபடுகையில் படிக்கட்டுகள் கட்ட துரித நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
இதன் பின்னர். சலவை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டார். இதில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், கவுன்சிலர்கள் குருசாமி, நிஷா கெளதமராஜா,சதிஷ்,செல்வராணி, திட்டக்குழு உறுப்பினர்கள் சத்தியபிரகாஷ், ஸ்டாலின், பொதுக்குழு ஸ்ரீதர்,அவைத்தலைவர் தீர்த்தம், பேரூராட்சி அலுவலர்கள்,உடன் வந்திருந்தனர்.