வால்பாறையில் நகர்மன்றம் சார்பாக கலைஞரின் மகளீர் உரிமைத் தொகை வழங்க ஆணை பிரப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் மாதாந்திர நகர் மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பெர்பெற்றி டெரென்ஸ் லியோன், நகராட்சி பொறியாளர் வெங்கடாச்சலம், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் முன்னதாக மன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் மற்றும் தமிழக மகளிருக்கான கலைஞரின் மகளீர் உரிமைத் தொகை வழங்க ஆணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

அதைத்தொடர்ந்து நகராட்சியில் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ள நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோருக்கு நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்

அதைத்தொடர்ந்து ஊசிமலை எஸ்டேட் சாலையை சீரமைக்கவும்,யானைகளால் சேதமடைந்துள்ள சத்துணவு கூடங்களை சீரமைக்கவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நகர் மன்ற உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டதைத்தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மன்றக்கூட்டம் நிறைவடைந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *