திருவள்ளூர்
அகரம் ஊராட்சியில் மின் கசிவு காரணமாக வீடு எரிந்து சாம்ப லானது தலைவர் தேவி ராஜன் தகவலின் பெயரில் பாதிக்கப்பட்ட வருக்கு நிதி மற்றும் நல உதவிகள் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அகரம் ஊராட்சி உப்புநெல்வாயல் பகுதி யை சேர்ந்தவர் குணசேகர் இவர் உடல்நிலை சரியில்லாமல் மருத் துவமனைக்குச் சென்ற போது வீட்டில் இருந்த குளிர்சாத பெட்டி யில் ஏற்பட்ட மின் கசிவு காரண மாக வீட்டிற்குள்ளேயே தீ பிடித்து வீடு முழுவதும் எரிந்து போனது
இது குறித்த தகவல் கிடைத்ததும் அகரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி ராஜன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு உடனடியாக வருவாய்த்துறையினர் மற்றும் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திர சேகருக்கு தகவல் தெரிவித்தார்
இவரது தகவலின் பெயரில்
கோளூர் வருவாய் ஆய்வாளர் கனிமொழி, கிராம நிர்வாக அலுவ லர்கள் திருவேங்கடம், நவநீதகிரு ஷ்ணன், டில்லிபாபு ஆகியோர் வந்து பார்வையிட்டு அரசின் நல உதவிகளை வழங்கினர். மேலும் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் வந்து ஆறுதல் கூறி தனது நிதியாக ரூ10 ஆயிரத்தை வழங்கினார்.
அப்போது ஊராட்சி மன்ற தலை வர் அகரம் தேவி ராஜன் துணைத் தலைவர் சதீஷ், வார்டு உறுப்பினர் நாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
உடனடியாக தகவல் தெரிவித்து நிதி நல உதவி பெற்று தந்த ஊராட்சி மன்ற தலைவர் தேவி ராஜனை பாராட்டினர்.