ஆர்.கண்ணன் செய்தியாளர் மணப்பாறை.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் சேத்துப்பட்டி(எ) சாத்தாம்பாடியில் ஸ்ரீ ஆலடியான், ஸ்ரீ செங்கடா முனி, ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ பிடரி அம்மன், ஸ்ரீ பட்டவன் தொட்டிச்சி, ஸ்ரீ முத்து சின்னம்மாள் ஏழு கன்னிமார் சுவாமி, (ஸ்ரீ மந்தை அம்மன்) ஆகிய கிராம தெய்வங்களின் ஆலயம் அமைந்துள்ளது.
48 நாட்கள் நடைபெறும் திருவிழா ஆனி மாதம் 5-ஆம் தேதி பிடிமண் கொடுத்து திருவிழா தொடங்கும். இதில் 40-வது நாள் விழாவின் முக்கிய நிகழ்வான புரவி எடுப்பு எனும் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது.
45 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறு புரவி எடுப்பில், சாத்தாம்பாடியிலிருந்து உற்சவ மூர்த்திகள் தாரைத்தப்பட்டைகளுடன் முன்னே செல்ல, பக்தர்கள் தங்களின் நேற்றிக் கடனை நிறைவேற்றும் வகையில் கருப்பசாமி சிலைகள் மற்றும் குதிரை, காளை, பசு, நாய் உள்ளிட்ட சுடு மண்ணால் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான சிலைகளை தலை மற்றும் தோள்களில் சுமந்து சென்று பெரியகுளம் வழியாக சிறிய குளத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ செங்கிடாய் முனி அய்யனார் ஆலயத்திற்கு சென்றடைந்தனர். அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் சாத்தாம்பாடி, சொறியம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம ஊர் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.