காவலர்கள் பற்றாக்குறையால் சிக்கி தவிக்கும் ஆரோவில் காவல் நிலையம்

நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ளது ஆரோவில் காவல் நிலையம் இந்த காவல் நிலையம் சுமார் 15 பெரிய கிராமங்களை அடங்கியது.

இங்கு தற்பொழுது சொற்ப இலக்கங்கள் கொண்ட போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர் இதனால் வழக்கு விசாரணை மற்றும் இதர பணிகளுக்கு போலீசார் மிகுந்த இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

மேலும் இதனால் பல காவலர்கள் விருப்ப பணி இடம் மாற்றம் செய்துகொண்டு செல்கின்றனர்.

மேலும் பல போலீசாருக்கு மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர் இதனால் பல்வேறு சட்டப் பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகிறது இதனை மாவட்ட கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *