பெரியகுளத்தில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட
மினி மாரத்தான் போட்டி:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக் குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கல்லூரியில் இருந்து தொடங்கிய போட்டியினை தாமரைக் குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கல்லூரிவிளக்கு, பெரியகுளம் கம்பம் சாலை,காந்திசிலை,கல்லூரி வளாகம் வரை நடைபெற்ற இப் போட்டியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கல்லூரி முதல்வர் ஜேசுராணி,பேரூராட்சி பணிநியமன குழு தலைவர் பாலாமணி பழனிமுருகன்,போக்குவரத்துகாவல் ஆய்வாளர் வைரமணி,
தென்கரை காவல் நிலைய சார்பாக ஆய்வாளர்கள் ஜான் செல்லத்துரை,அனுசியா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பணியாளர்கள் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..நிகழ்ச்சியின் முடிவில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டி பரிசுகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *