இராஜசிங்கமங்கலத்தைச் சேர்ந்த கமான்டோ படை காவலர் முகம்மது பர்லிஸ்கான் 70கிலோ எடை பிரிவில் தங்கம் வென்று அசத்தல் வெற்றி:

சென்னை அண்ணா நகரில் Mr.சென்னை ஆணழகன் போட்டி பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது.

போட்டியில் இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலத்தைச் சேர்ந்த மு.முகம்மது பர்லிஸ்கான் அவர்கள் முதல் பரிசு தங்க பதக்கம் மற்றும் பரிசுத்தொகை ரூ.10000 பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் இந்திய அளவிலான காவல்துறை ஆணழகன் போட்டியில் வெற்றி பெற தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கப்பதக்கம் வென்ற முகம்மது பர்லிஸ்கான் அவர்களுக்கு பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *