பழனியில் உலக யானைகள் தினம் பற்றிய விழிப்புணர்வு முகாமில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வனத்துறை சார்பில் உலகை யானைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பழனி கோயில் யானை கஸ்தூரி அழைத்து வரப்பட்டு வனத்துறையினர் முகாமை நடத்தினர். இதில் பள்ளி மாணவர்கள் வன பாதுகாவலர்கள் பலரும் முகாமில் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்நிகழ்வில் வனத்துறை அதிகாரிகள் யானைகள் காட்டின் வளத்தை எவ்வாறு பாதுகாக்கிறது, யானைகளின் நல்ல குணங்கள், யானைகள் மனித மோதல்களை தடுப்பது எவ்வாறு என்பது பற்றி பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வனத்துறை பணியாளர்கள், வன ஆர்வலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *