கோவை

ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன், பணம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கோவை தடாகம் சாலை இடையார்பாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் திருக்கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து தரிசனம் பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும்சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம்.

இதனிடையே ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் 2.50லட்சம் பணம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.தொடர்ந்து மணிகண்ட சிவாச்சாரியார் தலைமையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.கட்டளைதாரர் திரு.சந்தான கிருஷ்ணன், திருமதி நாகமணி குடும்பத்தினர் பூஜைகளை சிறப்பாக நடத்தினர். ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையில் கவுண்டம்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் விவேக் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தற்போது கோவில் திருப்பணிகள் நடந்து கொண்டிருப்பதால் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *