போச்சம்பள்ளி அருகே 19 ம் ஆண்டு ஸ்ரீ சென்னம்மாள் ஆலய தேர்திருவிழா மற்றும் பால்குடம் எடுக்கும் திருவாழா நடைபெற்றது : கொதிக்கும் எண்ணெய்யில் கையால் அதிரசம் எடுத்து கடவுளுக்கு படைக்கும் நிகழ்சியை கான திறளான பக்தர்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்பட்டி அருகேயுள்ள வண்டிகாரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சென்னம்மாள் கோவிலில்19 ம் ஆண்டு கோவில் திருவிழா நடைபெற்றது. புதன்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவானது வியாழன், வெள்ளி, சனிக்கிழமை மற்றும் ஞாயிறு ஆகிய ஐந்து நாட்கள் நடைபெற்றது.
இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான இன்று கோவிலுக்கு என ஒதுக்கப்பட்ட சிறிது விவசாய நிலத்தில் இந்த கோவில் பூசாரி காளியப்பன் என்பவர் அந்த விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல்லை கைகுத்ததில் அரிசியாக பிரித்து அந்த அரிசியை ஊறவைத்து அதிரசம் செய்வதற்காக எச்சில் படாமல் வாயில் துண்டை கட்டிக்கொண்டு அவராகவே அந்த அரிசியை இடித்து முறத்தால் புடைத்து அதிரசம் செய்ய வேண்டிய பணிகளை செய்து முடித்தார்
பின்னர் விறகுகளால் எரியூட்டப்பட்ட அடுப்பில் எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி நன்றாக கொதிக்கும் வேளையில் அதிரசம் வெந்தவுடன் அந்த அதிரசத்தை வெறும் கையால் கொதிக்கும் எண்ணெயில் இருந்து கோவில் பூசாரியான காளியப்பன் எடுத்து சாமிக்கு படையல் வைத்தார், தொடர்ந்து பக்தர்களும் வெறும் கையால் அதிரசங்களை எடுத்து அங்கிருந்த கூடையில் வைத்தனர்
பின்னர் கோவில் பூசாரி அந்த அதிரசங்களை எடுத்துக்கொண்டு தரையில் மண்டியிட்டவாறு கோவிலை சுற்றியுள்ள சாமி சிலைகள் முன்பாக அதிரசங்களை படையலாக வைத்து பூஜை செய்தார்.
இந்த திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கிடா வெட்டி தடபுடலான கறி விருந்து நடைபெற்றது. இந்த விழாவில் அண்ணாமலையார் கன்சேக்ஸன்ஸ் கார்த்திகேயன், மாதேஷ், சபரி, கோவிந்தசாமி, சுரேஷ், மாயக்கண்ணன் மற்றும் கிராம மக்கள் கிராம சுற்று வட்டார மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏறாளமான மக்கள் வருகை தந்தனர்.