இரா.மோகன்,தரங்கம்பாடி.செய்தியாளர்.
தரங்கம்பாடி அருகே எடுத்துக்கட்டி சாத்தனூர் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவரின் கார் கண்ணாடிகள் உடைத்து.பொறையாறு போலீசார் விசாரணை…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் தி.மு.கவை சேர்ந்த பைலட் பதவி வகித்து வருகிறார்.இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த பொலிரோ கார் கண்ணாடிகள் மர்ம நபர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
காரின் முன்புறமுள்ள கண்ணாடி மற்றும் பின்புறம் உள்ள கண்ணாடிகளை உடைத்து காரில் இருந்த சில பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் பைலட் பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தொடர்ந்து தனக்கும் குடும்பத்தினருக்கும் தொடர் அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் பைலட் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து பொறையார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆளுங்கட்சி ஊராட்சி மன்ற தலைவரின் கார் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது