கோவை

30 ஆண்டுகளில் இந்தியாவின் ஜவுளி வர்த்தகம் ரூ.30 லட்சம் கோடியாக உயரும் என்று மத்திய ஜவுளித் துறை மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.

ஆசிய ஜவுளித்துறை மாநாடு தென் இந்திய நூற்பாலைகள் சங்கத்தின் 90-வது ஆண்டு விழாவையொட்டி, இந்தி ஜவுளி தொழில் கூட்டமைப்புடன் இணைந்து “ஆசிய அளவிலான ஜவுளித் துறை மாநாடு |கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று தொடங்கியது.

இந்த மாநாட்டில் ஜவுளித் துறையில் ஆசிய அளவில் சிறந்து விளங்கும் பல நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

காலையில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் மத்திய ஜவுளி மற்றும் ரெயில்வே துறை இணை மந்திரி தர்ஷனா விக்ரம் ஜோர் திஷ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் , மாநில மந்திரிகள் கலந்து கொண்டனர்.

இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார், சைமா தலைவர் ரவிஷாம் ஆகியோர் வரவேற்று பேசினார்கள். அவர்கள் கூறும்போது, இந்தியா ஜவுளித்துறையில் சவால்களை சந்தித்து வளர்ச்சி பெற்று வருகிறது.

பருத்தி விளைச்சல் இந்தியாவில் குறைவாக இருப்பதால் 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
மத்திய ஜவுளித் துறை மந்திரி பியூஷ் கோயல் பேசும்போது கூறியதாவது:- ரூ.30 லட்சம் கோடி கடந்த ஆண்டு மிகவும் சவாலான ஆண்டாக இருந்தாலும், ஜவுளி ஏற்றுமதி 500 பில்லியன் டாலரில் இருந்து 676டாலராக உயர்ந்தது.ஜவுளித் துறையில் இந்தியாவின் பங்களிப்பு 30 சதவீதமாத உள்ளது. வரும் 30 ஆண்டுகளில் ஜவுளி பொருளாதாரம் ரூ.30 லட்சம் கோடியாக இருக்கும்.தமிழ்ப்புலவர் திருவள்ளுவரும் ஒரு நெசவாளி
தமிழக கலாச்சாரம் நமக்கு கற்றுக்கொடுப்பது ஏராளம். இந்த மாநிலம்வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
அனைத்து துறையையும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தி தமிழகம் மக்களிடம் உள்ளது.மனித வரலாற்றில் செய்திராத சாதனையாக சந்திராயன் 3 வெற்றி நாளான ஆகஸ்ட் 23 ஐ கொண்டாட வேண்டும்.
மிகவும் தரமான உதிரி பாகங்கள் ஏற்றுமதி செய்வதற்கான வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுவிட்ச்லாந்து, நார்வே உதிரிபாகங்களில் அதிகளவு முதலீடுகள் செய்யும் நாடுகளாகும். அதனை இந்திய ஜவுளி தொழிற் துறையினர் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இந்தியா மிகப்பெரிய நுகர்வோர் மட்டுமின்றி ஜவுளி மையமாகவும் உள்ளது.
பிரதமர் 2047 இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும் என சொல்வதை மெய்ப்பிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்
காலனித்துவ எண்ணத்தை அழித்து, நம் கலாச்சாரம், குடும்ப மகிமையை உணர வேண்டும் ஒரே குடும்பம் என்ற எண்ணம் கொண்டு வளர்ச்சியை, நிலையான வளத்தை ஏற்படுத்த வேண்டும் 140 கோடி மக்கள் ஜி.20 மாநாட்டை கொண்டாடுகின்றனர். மூளை முடுக்கெல்லாம் ஜி20 மாநாடு குறித்து எடுத்து சென்று உள்ளோம்
உலக தலைவர்கள் பிரதமர் மோடியை அன்புமிக்க, பிரபலமான, தலைவராக பார்க்கிறார்கள். பிரதமர் மோடிஅந்த அங்கீகாரத்தை இந்தியாவின் 140 கோடி மக்களுக்கானது என்று சொல்லியுள்ளார் நமது கடமையை உணர்ந்து முழு ஈடுபாட்டுடன் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் இந்தியா இழந்த புகழை மாற்றி, மிகப்பெரிய சக்தியாக மாற்ற வேண்டும்.21 ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய ஜவுளித் துறை இணை மந்திரி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் பேசும் போது, அதிக வேலைவாய்ப்பை கொடுக்கும் ஜவுளித் துறை , மேலும் வளர்ச்சியடையும் என்று கூறினார்.அண்ணாமலை
பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது கூறியதாவது:-
இந்தியாவின் ஜவுளி வர்த்தகம் வரும் ஆண்டுகளில் 350 பில்லியன் டாலராக உயரும் . ஏற்றுமதி மட்டும் 100 பில்லியன் டாலராக அதிகரிக்கும். பிரதமர் மோடி இந்தியாவை உலகின் முதன்மை நாடாக உருவாக்கி வருகிறார். ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு இந்த மாநாடு உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.கைத்தறி துறை அமைச்சர் கைத்தறி துறை அமைச்சர் காந்தி பேசும்போது கூறியதாவது:-
தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜவுளித்துறை அமைச்சர் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மத்திய ஜவுளி மந்திரி பியூஷ் கோயல் அரசியலுக்கு அப்பாற்பட்டு சிறந்த மனிதர். தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தர வேண்டும். மெகா ஜவுளி பூங்கா அவரது முயற்சியால் தமிழகத்துக்கு வர நடவடிக்கை மேற்கொண்டு வந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வானதி சீனிவாசன் எம்.எல்ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *