எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே மேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினார்.264 பள்ளிகளுக்கு புரவலர் நிதியையும் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலையூர் சீனிவாசா மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் 339 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பூம்புகார் தொகுதியில் அமைந்துள்ள 264 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு புரவலர் நிதியாக தலா 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
முதற்கட்டமாக தனது சொந்த நிதியிலிருந்து 264 பள்ளிகளுக்கு ரூபாய் 2 லட்சத்து 64 ஆயிரம் நிதியினை வழங்கினார். இந்நிகழ்வில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன் ,சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.ஜே. பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.