பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே பெருமாங்குடி வீரகாளியம்மன் ஆலய திருவிழா…

பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பெருமாங்குடி நடுத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரகாளியம்மன் ஆலய 8- ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பாபநாசம் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம். முளைப்பாரி,அழகு காவடி எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று ஆலயம் வந்தடைந்தனர் அதனை தொடர்ந்து ஆலயத்தில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்

ஏற்பாடுகளை பெருமாங்குடி நடுத்தெரு நாட்டாமை மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *