அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பாக மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

அலங்காநல்லூர்

இந்தியஜனாதிபதி துரோபதி முர்மு, அவர்கள் டெல்லியில் நடந்த விழாவில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமாருக்கு, தேசிய நல்லாசிரியருக்கான விருதும் மற்றும் சான்றிதழும் வழங்கினார் .

அந்த ஆசிரியர் முதன்முதலாக நேற்று காலையில் அலங்காநல்லூர் பள்ளிக்காக வந்தார், அவருக்கு பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பாக, மாடு, மயில், ஆட்டத்துடன், மேளதாளம் முழங்க கேட்டுக்கடை பகுதியில் இருந்து உற்சாகத்தோடு ஊர்வலமாக பஸ் நிலையம் வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் கல்யாணமுத்தையா, மற்றும் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *