திருநிலை ஊராட்சியில் இலவச திட்டங்கள் : தலைவர் அம்முசிவக்குமார் ஏற்பாடு.
திருவள்ளூர்
திருநிலை ஊராட்சியில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தினமும் மதிய உணவு, மற்றும் ஊராட்சியில் இறப்பு நேரிட்டால் குளிர்சாதனப் பெட்டி, பந்தல், உள் ளிட்ட பல்வேறு உதவிகள் இலவச மாக வழங்க ஊராட்சி மன்ற தலை வர் அம்மு சிவகுமார் ஏற்பாடு செய் துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது. திருநிலை ஊராட்சி இந்த ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அம்மு சிவக்குமார் ஆவார்.
இந்நிலையில் திருநிலை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவக்குமார் ஏற்பாட்டில் ஊராட்சியில் தினமும் மதிய வேளையில் முதியோர், மற் றும் மாற்றுதிறனாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்குவது மற்றும் ஊராட்சியில் இறப்பு நேரி ட்டால் சவகுளிர்சாதன பெட்டி, ஷமீனாபந்தல், 50 நாற்காலிகள், இரு போக்கஸ் லைட், டேபிள்கள் உள்ளிட்ட உதவி பொருட்களை உடனடியாக வழங்க ஊராட்சி மன்றம் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் அம்முசிவக்குமார் ஏற் பாடு செய்துள்ளார். இதனையடு த்து ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவக்குமார் நேற்று ஊராட்சியில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவை பரிமாறி இத் திட்டங்க ளை தொடங்கி வைத்து அவர்களு டன் மதிய உணவுவை சாப்பிட்டார். இத் திட்டமானது ஊராட்சி சேர்ந்த பொது மக்களுக்கு பெரும் வரவே ற்பு அளித்துள்ளது. குறிப்பிடத்தக் கதாகும்.