வலங்கைமான் அருகே வீட்டின் சுவர் இடிந்து தொழிலாளி பலி.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்துள்ள அரித்து வர மங்கலம் காவல் கரகத்திற்கு உட்பட்ட பூந்தோட்டம் ,கீழ ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தனமணி(55) இவர், அதே கிராமத்தில் மேலத்தெருவில் உள்ள அன்பரசி என்பவரது வீட்டின் மேற்கூறையை பிரித்து புதிதாக அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டார்,
அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் பக்கப்பாட்டு சுவர் திடீரென இடிந்து தனமணியின் மீது விழுந்தது.இதில் பலத்த காயமடைந்த தனமணியை அக்கம் பக்கத்தில் மீட்டு, ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு
கொண்டு சென்றனர், அவரை பரிசோதித்த டாக்டர்கள் தனமணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர், இச்சம்பவம் குறித்து அரித்து வாரம் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.