தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆவணி மாதம் 12/9/23 செவ்வாய் கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதர்க்கும் ஒன்பது வகையான அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்து தீபாராதனைகளும் நடைபெற்றது. உலக அமைதிக்காக கூட்டு வழிபாடும் நடைபெற்றது .

இங்கு தரிசனம் செய்ய வருகைதரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள் மாவட்டத்தில் இருந்து அதிக பக்தர்கள் வந்து தரிசனம் செய்தார்கள் பிரதோஷ கட்டளைதாரர் கருப்பயா கைலாசபட்டி அவர்கள் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது .

ஏற்பாடுகளை அன்பர் பணிசெய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் பொருளாளர் விஜயராணிமற்றும் குழு உறுப்பினர்கள் கோயில் நிர்வாகத்தின் சார்பாக செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *