திருவள்ளூர்

மெதூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிக் குப்பம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்ற து. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிச னம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மெதூர் ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட் டது பள்ளிக்குப்பம் கிராமம் இந்த பகுதியில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயம் தற்போது அப்பகுதி மக் களால் மற்றும் பக்தர்களால் பல லட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கப் பட்டு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனையடுத்து பக் தர்கள் மீது புனித நீர் தெளிக்கப் பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மீஞ்சூர் ஒன் றிய குழு துணை பெருந்தலைவர் தமிழ் சொல்லி பூமிநாதன், ஒப்பந் தக்காரர் சந்தானம், ஆசான பூதூர் சம்பத் மெதூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உஷா சசிகுமா ர், இளைஞரணி அமைப்பாளர் சிலம்பரசன், மெதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் முருகேசன், நந்தகுமார்,தாமோதரன்,பாக்கியா, மற்றும் கிராம பொதுமக்கள் ஏற் பாடு செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *