திருவள்ளூர்
பொன்னேரியில் கல்வி வளர்ச்சி சங்கம் சார்பில் பெரியாரின் 145 வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட் டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு கல்வி வளர்ச்சி சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந் நிகழ்ச்சிக்கு கல்வி வளர்ச்சி சங்க தலைவர் சகா தேவமாறன் தலைமை தாங் கினார். கல்வி வளர்ச்சி சங்க பொதுச் செயலாளர் மு கொ தமிழ ன்பன் நிகழ்ச்சியினை ஒருங்கி ணைத்தார்.
திராவிடர் கழக பொன் னேரி நகர தலைவர் அருள்அய்யா, கல்வி வளர்ச்சி சங்க இணை தலைவர் பா.புனிதராஜ், செயற் குழு தலை வர் ச.கிஷோர், கல்வி வளர்ச்சி சங்க அலுவலர் குறிஞ்சி மலர், இணை செயலாளர் சு.கவி தா, வட்டார ஒருங்கிணைப்பாளர் உ. சாந்தி,உள்ளிட்டோர் முன்னி லை வகித்தனர்.
நிகழ்ச்சியில் திராவிட கழக பொன்னேரி நகர செயலாளர் சுதாகர், மல்லிகார்ஜுனா, வேணி, ராணி, முருகன், இளையராஜா, பெரியார் பிஞ்சுகள் பவதாரணி, யாழிசை ஓவியா, தமிழ்மாறன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.
முன்னதாக பெரியார் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவ மாணவியர் களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்கினர். நிகழ்ச்சியில் சனாதன ஒழிப்பு முழக்கமிட்டனர்.