திருவள்ளூர்

ஆண்டார் குப்பம் அருள்மிகு பால சுப்பிரமணிய சுவாமி திருக்கோயி லில் இந்து அறநிலை துறை சார் பில் 50 ஆயிரம் மதிப்பில் 4கிராம் பொன்தாலி,உட்பட சீர்வரிசை பொருட்களுடன் இலவச திருமண ம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா ஆண்டார்குப்பம் பகுதியில் அருள்மிகு பாலசுப்ர மணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.இக்கோயிலில் நிதியிலி ருந்து இந்து அறநிலை துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடி ஒன்றுக்கு வேலூர் இணை ஆணையர் மண்டலம் சார்பாக கோவில் நிர்வாகம் சார்பில் இலவச திரு மணம் நடைபெற்றது. அதன்படி திருமணத்தில் பங்கேற்ற ஜோடி க்கு 50 ஆயிரம் மதிப்பீட்டில் 4 கிராம் தங்கத்தால் ஆன பொன் தாலி உட்பட சீர்வரிசை பொருட் கள் வழங்கப்பட்டது. இத் திருமண நிகழ்ச்சியானது நேற்று காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள்ளாக ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணி யர் கோவில் பரம்பரை அறங்காவ லர் ராஜசேகரகுருக்கள் தலைமை யிலும் திருவள்ளூர் மாவட்ட அறங் காவலர் குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் மற்றும் பெரியபா ளையம் அருள் மிகு பவானி அம்ம ன் திருக்கோயில் செயல் அலுவ லர் து.ரு. பிரகாஷ் ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய கோயில் செயல் அலுவலர் மா.மாதவன் மற்றும் திருப்பணியாளர்கள் ஆகி யோர் முன்னிலையிலும் நடைபெ ற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *