திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி யில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது இப்பள்ளியில் திரு வள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் மாற் றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடை பெற்றது.

இம்முகமானது பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட மாற்று திறன் அலுவலகம் இணை ந்து நடத்தியது. இதில் மாற்றுத்தி றனாளி மாணவர்களுக்கு முழு மருத்துவ பரிசோதனை குறைபா டுகள் அறிந்து மருத்துவ அட்டை வழங்கப்பட்டது.

மேலும் கண் உடல் இயக்க அறிகுறிகள் குறைபாடு கள் காது சம்பந்தப்பட்டவைகளும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 0 வயது முதல் 18 வயது உடைய மாணவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதன் மூலம் அவர்களுக்கு அனைத்து குறைக ளும் ஆய்வு செய்யப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறன் அலுவலர் சீனிவாசன், மாவ ட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ரா, மேற்பார்வையாளர் செந்தில் ஆன ந்தன், பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசன், துணை தலைமையசி ரியர் சுரேஷ், மற்றும் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *