பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.
பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல்…
திருவையாறு கும்பகோணம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு.
- மேற்பட்ட விவசாயிகள் கைது…….
தஞ்சாவூர் பாபநாசம் அருகே திருமண்டங்குடி தனியார் சக்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி 301-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இன்று 26.09.2023 தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர் அதற்காக அவர்கள் இன்று காலை திருமண்டங்குடியில் உள்ள காத்திருப்புப் போராட்ட இடத்தில் இருந்து புறப்பட்டபோது அவர்களை காவல்துறையினர் தஞ்சைக்கு செல்ல விடாமல் இங்கேயே மறித்தனர்.
இதனால் கரும்பு விவசாயிகள் காவல்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் தஞ்சைக்கு செல்ல அனுமதி மறுக்கவே கரும்பு விவசாயிகள் அண்டங்குடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனல்.
இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்குஅழைத்து சென்றனர்.
இதனால் இப்பகுதியில் பரபரப்பு சூழல் நிலவியது….