எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி ஏழு ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பள்ளிக்கு வராததால் மாணவர்கள் அதிர்ச்சி.தேர்வு நேரத்தில் பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 400க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 17 க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய பிச்சைமணி என்பவர் நேற்று பணி மாறுதலில் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்றார். இதனை அடுத்து பணி மாறுதலில் சென்ற ஆசிரியரை வழி அனுப்பி வைப்பதற்காக பள்ளியில் உள்ள 7 ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் வெளியூர் சென்றனர்.

காலாண்டு தேர்வு நடைபெறும் நேரத்தில் ஒரே நாளில் ஏழு ஆசிரியர்கள் திடீரென பள்ளிக்கு விடுப்பு எடுத்து பணிமாறுதலில் சென்ற ஆசிரியரை வழி அனுப்பிட சென்றதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் பள்ளியின் முன்பு கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


ஆசிரியர்கள் வராதது குறித்து மாவட்ட கல்விதுறை அதிகாரிகளிடம் கேட்ட போது ஆசிரியர்கள் விடுப்பில்தான் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.ஒரே நேரத்தில் சென்து ஏன் என்பது குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *