போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களது நினைவு தினத்தையெட்டி அவரது திருவுருவ படத்திற்கு பர்கூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சி.வீ.ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களுடைய 36ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் எம்ஜிஆர் அவர்களது திருவுருவ படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்சியில் ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் தூயமணி, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் செட்டிகுமார், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் திருமால், பர்கூர் ஒன்றிய துணைச் செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான கே.சி.செல்வம், மாவட்ட தகவல் தொழில் நுட்ப துணைச் செயலாளர் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி சிவசங்கரன், சரசு மனோகரன், கவிதா பழனி, மாவட்ட பிரதிநிதியும் முன்னாள் கவுன்சிலருமான நாகராஜ், ஒன்றிய கவுன்சிலர் குணசுந்தரி சீனிவாசன், வார்டு உறுப்பினர் ஜெயவேல், போக்கம்பட்டி கிளைச் செயலாளர் பைனான்ஸ் வேல், ஊராட்சி கழக செயலாளர் வைரவன், விஜயரங்கன், செந்தமிழ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நகர செயலாளர் பி.எம்.ரமேஷ்குமார் வரவேற்றார், இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள் ஸ்ரீ அண்ணாமலையார் கன்செக்ஸ்சன்ஸ் கார்த்திகேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், கே.கே.முனுசாமி, டி.ஆர்.சிவக்குமார், குணா ஆடியோ குணசேகரன், கோவிந்தசாமி, சேகர், அவை தலைவர் வணங்காமுடி, கிளைச் செயலாளர் விஜயன் திருப்பதி, தூயமணி மற்றும் அதிமுக கட்சி முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர், நிகழ்ச்சி நிறைவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் நன்றியுரை வழங்கினார்.