பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்
செங்கொடி இயக்கத்திற்கு பின்னால் அணி திரண்ட 44 நாட்டுப்புற ஏழைகளை தீயிட்டு படுகொலை செய்த வெண்மணி தியாகிகளுக்கு 55 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் ஒன்றிய துணை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

இதில் கும்பகோணம் மாநகர செயலாளர் விடுதலை சங்கர் குடந்தை ஒன்றியச் செயலாளர் விடுதலை செந்தில்குமார் வாடகை வீட்டில் குடியிருப்போர் மாவட்ட செயலாளர் கோபி ஆகிய முன்னிலையில் வகித்தனர்.

பண்ணை ஆதிக்கத்திற்கு பாடை கட்டுவோம் சோசலிச லட்சியத்தை உயர்த்தி பிடிப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மணப்படையூர் கிளை செயலாளர் செல்வம் புதுப்படையூர் கிளை செயலாளர் ஸ்டீபன் திருவிடைமருதூர் ஒன்றிய பொறுப்பாளர் நடராஜன் சாம்ராஜ், சோசில பொறுப்பாளர் பாலமுருகன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *