சத்தியமங்கலத்தில் பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது

சத்தியமங்கலம் டிச 26 சத்தியமங்கலம் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் ஆசிப், துணைத் தலைவர் சேவியர், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சக்திவேல், நகர தலைவர் முகம்மது பாரூக் ஆகியோர் தலைமையில் வடக்குப்பேட்டையில் அருகில் உள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் அருட்தந்தை ஜானை சந்தித்து பொன்னாடை போர்த்தி ரோஜாப்பூ மற்றும் இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினர்

இதைத்தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்களுக்கு பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினார் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இந்த நிகழ்ச்சியில் அய்யா கவிமணி நிர்வாக குழு உறுப்பினர் பிரபுதாஸ் , ரஃபீக், ஒர்க்ஷாப் சாதிக், லியாகத், மெடிகல் தாகிர், சதாசிவம், முருகேசன், கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *