செய்தியாளர். ச.முருகவேலு. நெட்டப்பாக்கம்.
நெட்டப்பாக்கம்.டிச.28. மத்தியில் ஆளும் பஜக அரசு மாநில அரசுகளின் கருத்துக்களுக்கு எதிராக எதேச்சிகாரமாக ஒவ்வோர் திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. இது நாட்டின் இறையாண்மைக்கும், ஜனநாயகத்தன்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் செயலாகவே பாஜக அல்லாத ஆளும் மாநில அரசுகள் கருதுகின்றன.
இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு ஆளும் புதுச்சேரியில் மிக எளிதாக ப்ரிபெய்டு மின் மீட்டர் திட்டத்தை புகுத்த கங்கணமிட்டு, அறிவிப்பு செய்து நடைமுறைப்படுத்த மத்தியஅரசு துடிக்கிறது. இதற்கு காங்கிரஸ், திமுக, அதிமுக, விடுதலைசிறுத்தை , சி.பி.ஐ, சி.பி.எம். பாட்டாளி மக்கள்கட்சி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம், ஆம் ஆத்மி உட்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
புதுவை கரியமாணிக்கம் முக்கிய சந்திப்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுவை காங்கிரஸ் கட்சித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தலைமைதாங்கி கண்டன உரையாற்றினார்.
வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மைநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயவேணி, விடுதலை சிறுத்தைக்கட்சி கொம்யூன் செயலாளர் மலரவன் முன்னிலை வகித்தனர். மத்திய அரசுக்கு எதிராகவும், ப்ரிபெய்டு மின்மீட்டர் திட்டத்திற்கு ஆதரவுதரும் என்.ஆர்.காங்கிரஸுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பிரகாசம் ரெட்டியார், ராமச்சந்திரன், சேகர், பாட்சாரெட்டியார், குமாரகிருஷ்ணா ரெட்டியார், ராஜகோபால், தட்சிணாமூர்த்தி, கோவிந்தசாமி, முத்துக்குமாரசாமி, பிரபாகர், சங்கர், சபரி, திருவரசன், கதிர்வேல், கவிஞர் முருகவேல், விடுதலைசிறுத்தைகட்சி மாநில துணைச்செயலாளர் கதிர்.பிரபாகர் உட்பட திரளாக 200−க்கும் அதிமானோர் கலந்துகொண்டனர்.