வலங்கைமான் அருகே உள்ள விளத்தூர் ஊராட்சியில் மயான கொட்டைகை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விளத்தூரில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் அடக்கம் செய்யும் வகையில் மருவத்தூர் சாலையில் மல்லியான் ஆற்று ஓரத்தில் மயான கொட்டகை உள்ளது.
காங்கிரட்டால் ஆன மயான கொட்டகை கட்டப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் கடந்த நிலையில் மயான கொட்டகை பழுதடைந்து எப்பொழுது விழும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் மயான கொட்டை கையை சுற்றி உள்ள சுற்றுச்சுவரும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
மேலும் மயான கொட்டகை அருகே உள்ள மல்லியன் ஆற்றில் இறுதிச்சடங்கு நிகழ்விற்கு தண்ணீர் எடுக்கும் வகையில் படித்துறை அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் படித்துறையும் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே பழுதடைந்த நிலையில் உள்ள மயான கொட்டகை மற்றும் சுற்றுச் சுவர்களை சரி செய்து தர அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.