கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப பயிற்சி முகாம்…

முல்லை தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கழகம் சார்பில் குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் வளாகத்தில் மூன்றாவது மாநில அளவிலான சிறப்பு சிலம்ப பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இக்கழகத்தின் நிறுவனத் தலைவர் பிரகாஷ்ராஜ் தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று ஒற்றைக்கம்பு, ஒற்றை வாள் வீச்சு, இரட்டை வாள் வீச்சு, வேல் கம்பு போன்ற ஆயுதப் பயிற்சிகளை எடுத்துக் கொண்டனர்.

இதில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சிலம்பப் போட்டியின் விதிமுறைகள் நுணுக்கங்கள் ஆகியவையும் கற்றுத்தரப்பட்டது. மேலும் இந் முகாமில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு முல்லை தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கழகத்தின் பொதுச் செயலாளர் கீர்த்திகா மேலாளர் கார்த்திக் மற்றும் பயிற்சியாளர் பாலாஜி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதிலிருந்து சர்வதேச சிலம்ப போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு அரசாங்கத்திடமிருந்தும் தனியார் அமைப்புகள் ஆகியவற்றில் இருந்தும் உதவி தேவைப்படுவதாக பயிற்சியாளர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த சிலம்ப பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ மாணவிகள் சர்வதேச சிலம்பப் போட்டியில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *