பெண் இல்லையேல்
நீயுமில்லை
நானுமில்லை
ஊருமில்லை
உலகுமில்லை
பெண் பிறந்தால்
பேதலிப்பதில்
நியாயமில்லை
பெண் என்ன?
ஆண் என்ன?
பெண்ணே
இல்லாத
உலகத்தில்
வாழமுடியுமா?
உங்களால்…
எல்லோருமே
ஆண் பெற்றால்
எவர்தான்
பெண்பெறுவது
ஆணைப்
பெற்றதால்
அவதிப்பட்டவர்
கோடி
பெண்ணைப்
பெற்றதால்
பெருமையுற்றவர்
கோடி
மணமானதும்
மறப்பவன் ஆண்!
மணமானாலும்
மறக்காதவள்
பெண்!
ஓருபோதும்
வருந்தாதே
பெண்ணிற்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *