ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் நகர தேமுதிக சார்பில் கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி

தேமுதிக நிறுவன தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் இந்த நிகழ்வினால் தேமுதிக திருவாரூர் நகரக் கழகம் சார்பில் நகருக்கு உட்பட்டநகராட்சி எதிராக தேமுதிக. கட்சியினர் திருவாரூர் நகர கழக செயலாளர் சதீஷ் என்ற சதீஷ்குமார் தலைமையில் மாநில விவசாய அணி செயலாளர் முத்தையாவுடன் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிணைந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பின்பு ஊதுவத்தி ஏத்தி வைத்து இரண்டு நிமிடம் மௌன. அஞ்சலி செலுத்தினர்

தேமுதிக நிறுவன தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன்
விஜயகாந்த் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்ணீர் மல்க அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *