தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் நடைபெறும் மக்கள் விரோத போக்கை கண்டித்து
கடையம் கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கிழக்கு ஒன்றிய தலைவர் ரத்தின குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் அன்புராஜ் , தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர் அருள் செல்வன், தென்காசி மாவட்ட துணை தலைவர் பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கஜேந்திரன், ஆலங்குளம் ஒன்றிய தலைவர் பண்டரிநாதன் ,கடையம் மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில், பாப்பாக்குடி ஒன்றிய தலைவர் முருகன், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய தலைவர் சுரேஷ் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.