தஞ்சை கிழக்கு மாவட்டம் சார்பில்

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உருவப்படத்திற்கு அஞ்சலி மாவட்ட செயலாளர் பாரதி மோகன் நேரில் மலர் தூவி அஞ்சலி.

மறைந்த திரைப்பட நடிகர் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு திருப்பனந்தாள் கடைவீதியில் அ.தி.மு.க வினர்
மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. பாரதிமோகன் , மாநில அம்மா பேரவை இணை செயலாளர் அசோக் குமார் , மாவட்ட மீனவர் அணி செயலாளர் ராஜேந்திரன் திருப்பனந்தாள் நகர செயலாளர், மூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகளான திருப்பனந்தாள் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராவணன் ரவிக்குமார், பூக்கடை மகேந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *