மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் – “தமிழ் உயிரத் தமிழன் உயர்வான் “, என்ற தலைப்பில் நடந்தது .
மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார் ,செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன், துணைச் செயலர் கு .கி .கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில் “தமிழ் உயிரத் தமிழன் உயர்வான் “,” என்ற தலைப்பில், கவியரங்கம்.நடந்தது கவிஞர்கள் இரா. இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், மா .வீரபாகு ,கி. கோ.குறளடியான், ச .லிங்கம்மாள், மு .இதயத்துல்லா,( இளையாங்குடி ) , பெரி . கரு .சம .சமயக்கண்ணு, அஞ்சூரியா க .செயராமன் , ம .ஆறுமுகம் ,புலவர் மகா .முருகபாரதி ,செ..அனுராதா ,சு முனைவர் .நாகவள்ளி ஆகியோர் கவிதை பாடினார்கள் .
புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். .. கவிஞர்கள் பாடிய கவிதைகளில் சிறந்த மூன்று கவிதை வாசித்த கவிஞர்கள் வீரபாகு,மகா .முருகபாரதி,தென்காசி ஆறுமுகம் , விருது பெற்றனர் . கவிதை போட்டியில் வென்ற கவிஞர் சமயக்கண்ணு முதல் பரிசும் ,கவிதாயினி செ..அனுராதா இரண்டாம் பரிசும் ,கவிஞர் பஞ்சாபிகேசன் மூன்றாம் பரிசும் பெற்றனர் . .முனைவர் வரதராசன் எழுதிய “வள்ளுவன் நோக்கில் களவியல் ” கவிதை நூல் வெளியிடப்பட்டது.
மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர் ,மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில் அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் நன்றி கூறினார்.