கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
குமபகோணம் அருகே பாரம்பரியமிக்க தப்பாட்ட இசையுடன் புத்தாண்டை வரவேற்று கொண்டாடிய கிராம மக்கள் …..
உலக முழுவதும்மக்கள் புத்தாண்டை சிறப்பாக ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகின்றன அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கீழத்தெரு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சியாமளாதேவி இளைஞர்நற்பணி மன்றம் மற்றும் பெண்கள் அனைவரும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தப்பாட்டம் இசையுடன் கிராம மக்கள் கேக் வெட்டி, வண்ண கோலமிட்டு , ஒருவருக்கொருவர் அன்பையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டு ஆட்டம் பாட்டம் என கோலாகலமாக ஊர் திருவிழாவை போன்று புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமான இளைஞர்கள்கிராம மக்கள் கலந்து கொண்டனர்.