கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்கள் வீ.முகேஷ்.
பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒசூர் பகுதியிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த டீசல் டேங்கர் லாரி ஒன்று சூளகிரியை அடுத்த குருபரப்பள்ளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மேலுமலை வனப்பகுதியில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது..
மேலுமலை வனப்பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை, என்பது 3 கிமீ தொலைவிற்கு பள்ளமாக அமைந்திருப்பதால் கனரக வாகனங்கள் அதிகவேகமாக இயக்கப்பட்டு அவ்வபோது சாலையில் நிலைதடுமாறி வாகனங்கள் விபத்திற்குள்ளாகி வருகின்றன
மேலுமலை வனப்பகுதியில் சில மீட்டர் தூரம் வரை டீசல் கொட்டியவாறே சென்று கவிழ்ந்த டீசல் டேங்கல் லாரியில், ஓட்டுநர் காயங்களுடன் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அந்த டேங்கர் லாரி ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
டேங்கர் லாரி தீப்பிடித்து அரை மணிநேரத்திற்கு மேலாக எரிந்து வருகிறது.தீயை அணைக்கும் பணியில் கிருஷ்ணகிரி தீயணைப்பு ஈடுபட்டிருந்தாலும், டீசலில் பற்றி எரிந்து வரும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்
தேசிய நெடுஞ்சாலையின், நடு ரோட்டிலேயே டீசல் டேங்கர் லாரி எரிந்து வருவதால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் 5 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது.