புதுடெல்லியில் தேசிய அளவிலான நெட்பால் போட்டி – மாணவர்களை வழியனுப்பும் சிறப்பு நிகழ்வு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான நட்பால் போட்டியில் கலந்து கொள்ள உள்ள நிலையில் அவர்களை வழி அனுப்பும் விழா ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

புதுடெல்லியில் இந்திய பள்ளிக்கல்வி குழுமம் நடத்தும் 67 வது தேசிய அளவிலான நெட்பால் போட்டியானது 03-01-2024 முதல் 10-01-2024 வரை நடைபெறுகிறது இதில் தமிழக அணி சார்பில் பங்கேற்கும் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பரணீஸ்வரன், கிருத்திகா, கனிஷ்கா, கோபிசந்த், சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ரித்தீஷ், தளவாய் டிஎஸ்என் பள்ளி மாணவர்கள் சந்திப், முத்துக்குமரன் ஆகியோர் தமிழக அணிக்காக விளையாட உள்ளனர்

இதில் தமிழக அணி பயிற்சியாளர் ஜெயங்கொண்டம் கார்த்திக், ராஜன் ஆகியோரை சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாண்டியன், பரப்ரம்மம் பவுண்டேஷன் நிறுவனரும் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் பரப்ரம்மம் முத்துக்குமரன், ஹோட்டல் ஸ்ரீ கார்டன் உரிமையாளரும் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் ஆர்.கே.சண்முகம், பள்ளி துணை முதல்வர் தாரணி மற்றும் பெற்றோர்கள் வழி அனுப்பி வைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *