திருப்பத்தூரில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி! வாலிபர் கைது!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கணியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சக்திவேல் (24) இவர் நேற்று நள்ளிரவு காட்பாடியில் இருந்து ரயிலில் திருப்பத்தூருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியி ஸ்டேட் பேங்க் ஏடிஎம் உள்ளது இதனை நள்ளிரவு ஒரு மணி அளவில் சக்திவேல் ஏடிஎம் மற்றும் சிசிடிவிகளையும் உடைத்துள்ளார் இதனால் ஹைதராபாத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு எச்சரிக்கை மணியில் ஒளித்துள்ளது இதன் காரணமாக இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் திருப்பத்தூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பெயரில் ரோந்து பணியில் இருந்த போலீசார் உடனடியாக ஏடிஎம்மில் இருந்த சக்திவேலை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவில் ஏடிஎம் உடைக்கப்பட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *