கரியம்பட்டி பகுதியில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டு ஆய்வக கட்டிடத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கரியம்பட்டி பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் இரண்டு ஆய்வக் கட்டடம் திறப்பு விழா பள்ளி முதல்வர் சீனிவாசன் குமாரன் தலைமையில் நடைபெற்றது.

இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வக கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

இதில் ஒன்றிய சேர்மன் திருமுருகன், திமுக ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், முருகேசன்,மோகன்ராஜ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *