வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர்- தமிழ் மன்றம் சார்பில் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் சார்பில் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் பட்டதாரி ஆசிரியை தி. உமையாள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பள்ளியின் தலைமையாசிரியர் மு. நாவளவன் தலைமை வகித்தார், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் க. செல்வம், துணைத் தலைவர் புலவர் சிவ. செல்லையன், பொருளாளர் ரா. ராஜேஷ், கௌரவ தலைவர் பா. சிவனேசன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சு. சுமத்திரா, துணைத் தலைவர் சிவ. காஞ்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினராக வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி முதல்வரின் நேர்முக உதவியாளர் இராம. வேல்முருகன் இலக்கிய பேருவுரையாற்றினார், இடையிடையே மாணவர்களிடம் இலக்கிய சம்பந்தப்பட்ட கேள்விகளை தொடுத்து சரியான பதில் கூறிய மாணவர்களுக்கு இலக்கிய புத்தகங்களை பரிசாக வழங்கினார். மேல்நிலை உதவி தலைமை ஆசிரியர் கி. சீனிவாசன், முதுகலை ஆசிரியர்கள் லூ. பெலிக்ஸ்ராஐ், மா பூபதி, இடைநிலை உதவித் தலைமை ஆசிரியர் கோ. காமராஜ் பட்டதாரி ஆசிரியர்கள் ச. ஜெயஸ்ரீ ம.ராஜரத்தினம் வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளி தலைமையாசிரியர், சிறப்பு விருந்தினர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை முதுகலை ஆசிரியை எம். அனுசுயா தொகுத்து வழங்கினார். பட்டதாரி தமிழ் ஆசிரியை ப. சித்ரா அனைவருக்கும் நன்றி கூறினார்.