கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக ரமேஷ் குமார் அண்மையில் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற நாள் முதல் மாநகரத்தில் உள்ள வார்டு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக பாஜக நிர்வாகிகளுடன் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறார்.

இதனிடையே கோவை ராம் நகர் மண்டல் 67 வது வார்டில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட தலைவர் ரமேஷ்குமாருக்கு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சபரிபாலன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் ஐயப்பன், கைலாஷ், மாதேஷ், குமரகுரு ,விஜய் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *