திருவாரூர் அரசு போக்குவரத்து பணிமனையின் திருவாரூர் கிளையின் முகப்பு வாயில் முன்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கங்களை சார்ந்த. போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
‘வரவுக்கும் செலவுக்கும் உள்ள வித்தியாச தொகையை அரசே வழங்க வேண்டும் என்றும் 15- வது ஊதிய குழு ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பேருந்தை இயக்குவதற்கு ஆதார் கார்டு உள்ள ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களையும் ஆட்டோ ஓட்டுநர்களையும் தேர்வு செய்து பயிற்சி கொடுக்கப்படுகிறது
ஆர்ப்பாட்டத்தில் இதுகுறித்து பேசிய போக்குவரத்து ஊழியர் “இந்த அரசாங்கம் திமிர் பிடித்த அரசாங்கம் என்றும், தமிழகம் முழுதும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்றும் , தற்காலிக ஓட்டுநர் என்ற பெயரில் தட்டு ரிக்க்ஷா ஓட்டுபவர்களையும் ஆட்டோ ஓட்டுநர்களையும் தயார் செய்து வருகிறீர்கள் என்றும், மக்களை படுகுழியில் தள்ளுவதற்கு அரசாங்கம் துணிந்து விட்டது
என்றும் எங்களது வண்டியை எங்களாலேயே ஓட்ட முடியாது எனவும் உங்கள் உயிருக்கு நாங்கள் உத்திரவாதம் கிடையாது’ என்றும் இந்த அரசு தான் பொறுப்பு என்றும் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தை சார்ந்த. போக்குவரத்து ஊழியர்கள் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்