சகாதேவன் போச்சம்பள்ளி

போச்சம்பள்ளி அடுத்த மத்தூரில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அறம்விதை அறக்கட்டளை ஒருங்கிணைத்து நடத்தும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மஞ்சப்பையின் தேவைகள் குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் கரகாட்டம் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்டுத்தினர்.

நெகிழி இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்க வேண்டுமென மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஆனந்திமாலா, பாரம்பரிய இயற்கை விவசாய பெண்கள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கிரிஜா, சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் மஹபூப்பாஷா, மத்தூர் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *