வி. தங்கப்பிரகாசம், செய்தியாளர், புதுச்சேரி.
புதுச்சேரி அரசு நல வழித்துறை மற்றும் குடும்ப நலத்தின் தேசிய கண்பார்வை இழப்பு தடுப்பு திட்டம் புதுச்சேரி அரசு கல்வித்துறை இணைந்து நடத்தும் மாணவர்களுக்கு கண் குறைபாடுகள் கண்டறிவது பற்றிய பயிற்சி முகாம் இரண்டாவது நாளாக லாஸ்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 200 ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்த முகாமை தேசிய கண் பார்வை இழப்பு தடுப்பு திட்ட அதிகாரியும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை கண் பிரிவின் தலைமை மருத்துவருமான டாக்டர் தணிகாசலம் கண் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி கண் தானம் மற்றும் கண்களின் குறைபாடுகள் பற்றி ஆசிரியர் பெருமக்களுக்கு எடுத்துக் கூறினார்.
அதனை தொடர்ந்து பயிற்சி முகாமினை டாக்டர் கவிதா அஸ்வின் டாக்டர் விஷாலி இனைந்து புதுச்சேரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிள் உள்ளா மாணவர்களுக்கு எவ்வாறு கண்களை பாதுகாப்பது கண்களின் குறைபாடுகளை கண்டறிந்து அவர்களுக்கு தேசிய கண் பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் மூலம் இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன என்பதையும் தெரிவித்து இந்த பயிற்சி முகாமினை சிறப்பாக நடத்தினார்கள்.