சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் தை மாதபிறப்பை முன்னிட்டு சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது :

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர மூர்த்தியும், நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர்.

இக்கோவிலில் அக்னி, சூரியன் ,சந்திரன் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இன்நிலையில் தை மாதபிறப்பையோட்டி சுவாமி, அம்பாள் தீர்த்தக் கரையில் எழுந்தருள அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து அஸ்திர தேவர் மூன்று தீர்த்த குளங்களிளும் தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது , இந்த தீர்த்தவாரியின் பூஜைகளை குருக்கள் வினோத் (எ) ராமநாதன் செய்துவித்தார்.இந்நிகழ்வின் போது திரளான பக்தர்கள் தீர்த்த குளங்களில் நீராடி வழிபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *