பெரியஊர்சேரி கிராமத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி கிராமத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அலங்காநல்லூர் எம்ஜிஆர் ஒன்றிய இளைஞரணி இணை செயலாளர் செந்தில்குமார், அதிமுக ஊராட்சி கழக செயலாளர் கார்த்திக், கிளை கழக செயலாளர்கள் சந்திரன், நடராஜன், ஒன்றிய மகளிரணி செயலாளர் மணிமேகலை, ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, கிளை தகவல் தொழில்நுட்ப செயலாளர் முருகன், மற்றும் நிர்வாகிகள் ஹரிராம், பக்கிரி, முகமது, கோவில்பிச்சை, குமரேசன், ஞானசேகரன், ஆறுமுகம், பாலசுப்பிரமணி, மகேஸ்வரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *