இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மதுரை ஜீவா நகரில் பொங்கல் விழா மற்றும் ஜீவானந்தம் நினைவு தின நிகழ்ச்சி

மதுரை மாநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு பகுதி சார்பாக ஜீவா நகரில் பொங்கல் விழா மற்றும் ஜீவானந்தம் 61 வது நினைவு தின வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. விளையாட்டு போட்டி மற்றும் சிலம்ப போட்டி சிறப்பாக நடைபெற்றது.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் ரவி , மதுரை மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முருகன், புறநகர் மாவட்ட செயலாளர் முத்துவேல் , பகுதி செயலாளர் சுமதி, ஏ.ஐ.டி.யு.சி கட்டுமான சங்க பகுதி செயலாளர் பாலமுருகன், மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி, கட்டுமான சங்க மதுரை மாவட்ட செயலாளர் இருளாண்டி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பழனிமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *