வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தை பிரம்மோற்சவம் விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் தை பிரம்மோற்சவம் விழாவை முன்னிட்டு, பத்து நாட்கள் ஹோமம் மற்றும் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று காலை கோ பூஜை, ஜபம், ஓமம், யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. மாலை ஆறு மணி அளவில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் அதனைத் தொடர்ந்து ஜபம், ஓமம், பூஜைகள், தீபாரதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அருள் வாக்கு சித்தர் கரூர் மகாலட்சுமி அம்மா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி அ.ரமேஷ், பரம்பரை அறங்காவலர் வலங்கைமான் கே. நடராஜன்& சகோதரர்கள், சென்னை ஜி. சுப்பிரமணியன், உபயதாரர்கள் மற்றும் வலங்கைமான் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் நற்பணி மன்ற அறக்கட்டளை குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.