கைலாசநாதர் மலைக்கோயிலில் தைப்பூச பெளர்ணமி கிரிவலம் தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் தை மாதம் 25/ 1/2024 வியாழக்கிழமை காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் வந்து கொண்டே இருந்தனர்

மாலை 5 மணிக்கு மேல் அதிக பக்தர்கள் கிரிவலம் வந்து மலைமேல் அமைந்துள்ள கைலாசநாதரை வழிபட்டு சென்றனர் பெளர்ணமியை முன்னிட்டு கைலாசநாதருக்கும் பெரியநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகமும்செய்து தீபாராதனைகள் நடைபெற்றது உலக அமைதிக்காக கூட்டு வழிபாடு நடைபெற்றது வருகை புரிந்த பக்தர்களுக்கு வி.ப.ஜெ. பசுமை உலகம் நர்சரி சார்பாக மரக்கன்றுகள் வழங்கபட்டது சிறப்பான அன்னதானத்தை தேனி திரு சர்வேஸ்வர ராஜா தொழில் அதிபர் அரசு ஒப்பந்தகாரர்அவர்கள் சார்பாக வழங்கப்பட்டது

ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு
தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் பொருளாளர் விஜயராணி மற்றும்குழு உறுப்பினர்கள் செய்திருந்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *